பொல்லால் தாக்கப்பட்டு 63 வயது நபர் பலி - FLASH NEWS - TAMIL


பொல்லால் தாக்கப்பட்டு 63 வயது நபர் பலி

(எச்.எம்.எம்.பர்ஸான்)

பொல்லால் தாக்கப்பட்ட நிலையில் நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் (4) செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓமனியாமடு கிராமத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.

இருவர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கொலையில் முடிந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஓமனியாமடு கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 63 வயதுடைய செல்லையா சுந்தரலிங்கம் என்பவர் பலியாகியுள்ளார்.

மரணமடைந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தாக்கிய நபரை கைது செய்ய வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.