அரிசி தொடர்பான பிரச்சினைக்குரிய நிலைமைக்கு தீர்வுகளை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக அரிசி சந்தையில் இருந்து விலகி போராட்டத்தில் ஈடுபட புறக்கோட்டை அரிசி வியாபாரிகள் தீர்மானித்துள்ளனர்.



நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளின் சோதனைகள் அரிசி வியாபாரத்திற்கு ஒரு தடையாக இருப்பதாகவும், அரசாங்கம் அரிசி பிரச்சினைக்கு சரியான தீர்வை வழங்கியவுடன் நுகர்வோர் விவகார அதிகாரசபை அந்த சோதனைகளை செயல்படுத்த வேண்டும் என்று வர்த்தகர்கள் கருதுவதாகவும் புறக்கோட்டை அரிசி வியாபாரிகள் கூறுகின்றனர்