முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அவரது வாழ்நாள் அர்ப்பணிப்பை அங்கீகரித்து, இலங்கையின் அரசியல் வரலாற்றில் அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை பிரதமர் நினைவுகூர்ந்தார்.

மேலும் அவரது குடும்பத்தினர், சக ஊழியர்கள் மற்றும் அவரது இழப்பால் துயருறும் அனைவருக்கும் தனது இரங்கலை தெரிவித்தார்.