டிசம்பர் மாதத்தில் மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. மின்சார சபையின் யோசனைகள் தொடர்பில் பொது பயன்பாட்டு ஆணைக்குழு ஆராய்ந்து வருகிறது.

நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை மேற்கொள்ளப்படும் மின் கட்டண மறுசீரமைப்பை இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை மேற்கொள்ளும் முறை தொர்பிலான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எதிர்வரும் நாட்களில் விரிவாக ஆராயவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.