பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த லொறியை நோக்கி பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் சூரியவெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

லுனுகம்வெஹர பிரதேசத்திலிருந்து சூரியவெவ பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்த லொறியை சோதனையிட பொலிஸார் வாகனத்தை நிறுத்துமாறு சமிக்ஞை காட்டியும், லொறி அதனை பொருட்படுத்தாமல் கடந்து சென்றுள்ளது.

இதன் காரணமாக லொறியின் டயரை குறிவைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

அதன் பின்னர், லொறி நிறுத்தப்பட்டு, அதன் சாரதி சூரியவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மேலும், அந்த லொறியில் 17 மாடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கைதான லொறியின் சாரதியை ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்