தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவை கைது செய்ய வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் எம்பிலிப்பிட்டிய மாநகர சபைக்கு முன்பாக தேசிய மக்கள் சக்தியை ஊக்குவிக்கும் வகையில் போலியான கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.
இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருவதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பான செயல்முறை தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என்றும் அவர் கூறினார்.
இது தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் சதி எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK