வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் உலகில் அபிவிருத்தியடைந்த நாடாக உலகில் முன்னேறி வரும் ஜப்பான் இவ் வேளையில் ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நீதி அமைச்சர் நன்றி தெரிவித்தார். ஜப்பானும் இலங்கையும் நீண்டகாலமாக மிக நெருக்கமாகப் பணியாற்றிய இரண்டு நாடுகள் எனவும் இரு நாடுகளும் முன்பை விட நெருக்கமான உறவில் செயற்படுவது மிகவும் முக்கியமானது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பு 07 இல் உள்ள ஜப்பானிய தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற ஜப்பானிய தேசிய தின கொண்டாட்டத்தில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானிய தேசிய தின கொண்டாட்டம் 2024.02. 21ஆம் திகதி பிற்பகல் கொழும்பு 07 இல் உள்ள ஜப்பானிய தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றதுடன், பிரதம அதிதியாக நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

விழாவில் உரையாற்றிய  அமைச்சர், ஜப்பானிய அரசாங்கம் இந்த நாட்டில் தனியார் துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை தீவிரமாக முன்னெடுத்துச் செல்வதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும்  பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய இலங்கையின் நிலைமையை மிகக் குறுகிய காலத்தில் மீள் கட்டியெழுப்ப   எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என சுட்டிக்காட்டிய ஜப்பானிய தூதுவர் திரு.மிசுகோஷி ஹிடேகி, இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாகவும் இலக்குகளை நோக்கி நம்பிக்கையுடன் நகர்வதால் எதிர்காலம் சிறந்த முறையில் இருக்கும் என்றும்  மேலும் தெரிவித்தார். .

ஜப்பானிய பிரஜைகள், எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் அதிகாரிகள், பாதுகாப்பு படைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் அதிகாரிகள், அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் ஜப்பானிய தூதரகம் உட்பட ஜப்பானிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட பெருந்திரளான மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்