பேராதனை பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  


இதன் காரணமாக பல்கலைக்கழக ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணியுமாறு பல்கலைக்கழக சுகாதார நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழக சுகாதார நிலையத்தில் காய்ச்சல், தடிமன் காரணமாக சிகிச்சை பெற்ற காரியாலய ஊழியருக்கே கோவிட் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட நபர் இன்று வெள்ளிக்கிழமை (05) உடனடியாக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.