வற் வரி அதிகரிப்பு: மக்கள் கிளர்ந்தெழும் நிலைக்கு வழியேற்படும் - சிறீதரன் எச்சரிக்கை - FLASH NEWS - TAMIL


வற் வரி அதிகரிப்பு: மக்கள் கிளர்ந்தெழும் நிலைக்கு வழியேற்படும் - சிறீதரன் எச்சரிக்கை

 வற் வரி அதிகரிப்பானது மிகவும் பொருளாதார இக்கட்டான நிலையிலுள்ள மக்களை பெரிதும் பாதித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக அரகலய போராட்டம் போன்ற அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் நிலைக்கு வழியேற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.



ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கு வருமானம் இல்லை, இந்த நிலையில் மக்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக அரகலய போராட்டம் போன்ற அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் நிலைக்கு வழியேற்படும். சுயமாக மக்களின் நலன்களை பற்றி அரசு சிந்திக்காது சர்வதேச நாணய நிதியத்திற்காகவே செயற்படுகிறது.


தேர்தல் பிரச்சாரத்திற்கான ஆயத்தமாகவே ஜனாதிபதி வருகை உள்ளது. பிரச்சினையை நாடாளுமன்றத்திலே தான் தீர்க்க முடியும் என்கிறார். கட்டடம் கட்டி தருகிறேன், கைத்தொழில் பேட்டை அமைக்கிறேன் என்று மாத்திரம் சொல்வதற்காக வருகிறார்.

வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கிய பணத்திற்கான நடவடிக்கைகள் ஒன்றும் நடைபெறவில்லை. கடந்த வரவு செலவுத்திட்டத்தில் தேர்தலுக்கு ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.

ஆனால், தேர்தலும் நடைபெறவில்லை. தமிழ் மக்களின் ஆதரவை எப்படி பெறுவது என்ற நோக்கத்தோடு தான் அவர் வடக்கிற்கு வருகிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.