அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களின் பணம் செலுத்தும் நடவடிக்கைகளை இணையவழி முறையின் ஊடாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக,

உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்குள் கையடக்க தொலைபேசி செயலி ஊடாக, அந்த செயற்பாடுகளை முன்னெடுக்க தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.