வவுனியா, அரபா நகர் குடியேற்ற கிராமத்தின் 25 வருடப் பூர்த்தியை முன்னிட்டு, ஊர் மக்களின் ஏற்பாட்டில், வெள்ளி விழா விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சி ஆகியன, கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) அரபா நகர் பிரதேசத்தில் இடம்பெற்றன.

இந் நிகழ்வுகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், கௌரவ அதிதியாக வவுனியா மாவட்ட உதவி உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் ரதீஷ் மற்றும் UNDP பணிப்பாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.