அநுராதபுரம் வாகன விபத்தில் தாயும் மகளும் பலி
அநுராதபுரம், ஜெயந்தி மாவத்தையில் உள்ள கதிரேசன் கோவிலுக்கு முன்பாக இன்று (21) இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சஷிகா துலானி வீரசிங்க (36) மற்றும் அவரது 8 வயது மகளான திசானி பிரியன்ஷா ஆகியோரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள், அதே திசையில் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை 37 வயதுடைய டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment