கஞ்சா உற்பத்தியில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்! டயானா கமகே வெளியிட்ட தகவல் - FLASH NEWS - TAMIL


கஞ்சா உற்பத்தியில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்! டயானா கமகே வெளியிட்ட தகவல்


கஞ்சா உற்பத்தியில் இலங்கை உலகளவில் முதனிலை பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சுமார் 22 வகையான கஞ்சா வகைகள் காணப்படுவதாகவும், அவற்றின் ஊடாக பல்வேறு முக்கிய மருந்துப் பொருட்களை தயாரிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக நிலையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கஞ்சா உற்பத்தியில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்! டயானா கமகே வெளியிட்ட தகவல் | Sri Lanka Can Become Leader In Cannabis

கஞ்சா செடிகளை வெறும் போதை தேவைக்காக மட்டும் பயன்படுத்த வேண்டியதில்லை எனவும், பல்வேறு மருத்துவ குணங்கள் இந்த செடியில் காணப்படுவதாகவும் கூறியுள்ளாள்ளார்.

மேலும், பத்து ஏக்கர் கஞ்சா செய்கையின் ஊடாக 200 மில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்ட முடியும் எனவும்,உரிய ஒழுங்குபடுத்தல்களுடன் போதைப் பொருள் தேவைக்கு அப்பாலான கஞ்சா செய்கையின் ஊடாக நாட்டுக்கு பாரியளவில் பொருளாதார நலன்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.