வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம் ! - FLASH NEWS - TAMIL


வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம் !


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகள்  அச்சிடுவதற்கான பணிகள் மாவட்ட ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கிறது.

தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தேர்தல்கள் ஆணைக்குழு தயாரித்து, அச்சிடுவதற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதற்கு தயாராக உள்ளதாக அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான கடதாசிகள் அரசாங்க அச்சக திணைக்களத்திடம் போதுமானளவு கையிருப்பில் உள்ளதாக அரசாங்க அச்சக  திணைக்கம்  தெரிவித்துள்ளது. 

அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான ஏனைய ஆவணங்களை அச்சிடும் பணிகள் ஏற்கனவே அரசாங்க அச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரச அச்சக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.