தனுஷ்கவுக்கு பிணை


பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.


குறித்த வழக்கு இன்று சிட்னி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீலங்கா கிரிக்கட் 150,000 அமெரிக்க டொலர் பிணைத்தொகை வழங்க முன்வந்ததைத் தொடர்ந்து இவ்வாறு தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments