போராட்டகாரர்களின் மனங்களில் வெறுப்பும் கைகளில் இரத்தமும் படிந்துள்ளன! - முன்னாள் பிரதமர் மஹிந்த! - FLASH NEWS - TAMIL


போராட்டகாரர்களின் மனங்களில் வெறுப்பும் கைகளில் இரத்தமும் படிந்துள்ளன! - முன்னாள் பிரதமர் மஹிந்த!



பொருளாதார நெருக்கடி மக்கள் மத்தியில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் என்பது உண்மை. மக்களின் கோபத்தை வன்முறையாக கொண்டு செல்லும் சக்தி நாட்டில் தோற்றம் பெற்றுள்ளது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இன்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் தீவிரவாதம் அழிக்கப்பட்டு மரண அச்சுறுத்தல் இல்லாதொழிக்கப்பட்டது. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரளவின் மரணத்தை தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள் அவதானத்துடன் வீதிக்கு இறங்குகிறார்கள்.

போராட்டக்காரர்களின் மனங்களில் வெறுப்பும் கைகளில் இரத்தமும் படிந்துள்ளன. இது முறையற்றது. அன்று போராட்டகளத்தில் போராட்டத்தை தணிவடைய செய்ய அவ்விடத்தில் இருந்த மத தலைவர்கள் அவதானம் செலுத்தவில்லை என்றார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.