முஷரப் எம். பி சபையில் உரையாற்றும்போது கூச்சல் குழப்பம்


காமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுன் நபி பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது,சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.  அவரை பேசவிடாது எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  கூச்சலிட்டனர். 
 அவரை பேசுவதற்கு அனுமதிக்குமாறு சபாநாயகரும் ஆளும் தரப்பு எம். பிகளும் கேட்டுக் கொண்ட போதும் அவர் முறையாக பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் முஷாரப் எம்.பி சற்றுமுன் உரையாற்றும் போது அவர் முன் ஐயாயிரம் ரூபா நாணயத் தாளை நீட்டியபடி நின்றார் சாணக்கியன் எம்.பி . ஆளுங்கட்சியிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த பின்னர், நாட்டின் நிலைமை குறித்தும் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் குறித்தும் முஷாரப் எம்.பி பேசினார். 

அதன்போது அவர் முன் சென்ற சாணக்கியன் எம்.பி ,ஐயாயிரம் ரூபா தாளை நீட்டியபடி அதனை பெற்றுக்கொண்டு பேசுமாறு சைகை செய்தார். இதன்போது சபையில் களேபரம் ஏற்பட்டது.ஆளுங்கட்சி எம்.பிக்கள் இதன்போது சாணக்கியனுக்கு எதிர்ப்பினை வெளியிட்டனர் யாரோ கூச்சல்  விட்டாலும் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை.நாடும் மக்களும் தான் எனக்கு முக்கியமே தவிர தனிப்பட்ட எவரும் முக்கியமல்ல.   எந்த நிலையிலும் சபையில் தான் தனித்து செயல்படப் போவதாக அவர் உரையாற்றும்போது கூறினார். 

تعليقات