கட்டுகஸ்தோட்டையில் தீ விபத்து : மூவர் உயிரிழப்பு: 4 வீடுகள் சேதம்


மெனிக்கும்புர – கட்டுகஸ்தொட்ட, மெனிக்கும்புற பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

 இந்த தீ விபத்து இன்று (24) அதிகாலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 4 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்துள்ளதுடன், காவல்துறையினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



تعليقات