பலத்த பாதுகாப்புடன் ஓட்டமாவடி - மஜ்மா நகரில் ஜனாஸாக்கள் நல்லடக்கம் - FLASH NEWS - TAMIL


பலத்த பாதுகாப்புடன் ஓட்டமாவடி - மஜ்மா நகரில் ஜனாஸாக்கள் நல்லடக்கம்


(எச்.எம்.எம்.பர்ஸான் , எஸ்.எம்.எம்.முர்ஷித்)

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்து வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டிருந்த ஜனாஸாக்கள் இன்று (5) நல்லடக்கம் செய்யப்பட்டன.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மா நகர் பகுதியில் அமைந்துள்ள காணியிலே இவ் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டன.

பாதுகாப்புப் படையினர் மற்றும் சுகாதாரப் பிரிவினர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இன்று பிற்பகல் 4 மணி வரை இரு ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டன.

இன்றைய தினம் பத்து ஜனாஸாக்களை அடக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜனாஸாக்களை அடக்கும் பகுதிற்குள் யாரும் செல்லாத வகையில் இராணுவத்தினர் கடும் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

அத்துடன் ஜனாஸா அடக்கம் செய்யும் இடத்துக்குள் செல்வதற்கு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.