இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் 40 நாடுகள்
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் முன்னகர்த்தப்படவுள்ள யோசனையில் 40 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
எனினும் இதில் 12 நாடுகளே பிரேரணையின் வாக்கெடுப்பில் வாக்களிக்கும் தகுதியைக் கொண்டுள்ளன.
இந்த யோசனையின் இறுதி வரைபு ஏற்கனவே இலங்கை அரசாங்கத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதனை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. யோசனைக்கு ஆதரவளித்துள்ள நாடுகள் இணை அனுசரணையாளர்களாகவும் ஆதரவு நாடுகளாகவும் செயற்படவுள்ளன.
இந்தநிலையில் எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கைக்கு எதிரான யோசனை வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK