ஊடகவியலாளர் பிஸ்ரின் முகம்மது எழுதிய சகவாழ்வியம் - FLASH NEWS - TAMIL


ஊடகவியலாளர் பிஸ்ரின் முகம்மது எழுதிய சகவாழ்வியம்


ஊடகவியலாளர் எம்.ஜே.பிஸ்ரின் முகம்மத் எழுதிய சகவாழ்வியம் என்ற நூல் வெளியீடு எதிர்வரம் 06ஆம் திகதி, கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் மாலை 3.30இற்கு வெளியீடு காணவுள்ளது.

இலங்கையில் மிக முக்கியமாக பேசப்பட வேண்டிய சகவாழ்வியம் குறித்த இலங்கையை மையப்படுத்திய உரையாடலாக இந்த நூல் அமைந்துள்ளது.

வீரகேசரியில் தனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்து தொலைக்காட்சியில் அரசியல் நிகழ்ச்சிகளை தொகுத்து, வழங்கிய பிஸ்ரின் முகம்மத்தின் இந்த நூல் வெளியீட்டில் சிறப்பு அதிதியாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப் பிரிய கலந்துகொள்கிறார்.

இந்த நூல் வெளியிட்டில் கலந்தகொள்ள விருப்புவோம், சுகாதார பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு, 0775070171 என்ற இலக்கத்தில் வரவை கட்டாயம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

இலங்கையின் இன்றைய தேவையாக இருக்கும் சகவாழ்வு குறித்து பேசும் ஊடகவியலாளருக்கு பிஸ்ரின் முகம்மத்தின் நூல் வெளியிட்டிற்கு வாழ்த்துக்கள்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.