அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட சுகாதார அமைச்சர் பவித்ரா - FLASH NEWS - TAMIL


அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட சுகாதார அமைச்சர் பவித்ரா


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி நேற்று இரவு கொழும்பு IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

குறித்த வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அவர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார் என சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இரத்மலானை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு அவர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக அடையாளம் காணப்பட்ட பின்னர் அவர் ஹிக்கடுவையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் நேற்று காலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று இரவு அவர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

அவரது கணவர் மற்றும் மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரண்டாவது PCR பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். எனினும் அவர்களுக்கு கொரோனா தொற்றவில்லை என உறுதியாகியுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.