தனிமைப்படுத்தப்பட்ட மாஞ்சோலை கிராமத்திற்கு உலர் உணவுப் பொருட்கள் கையளித்தல் - FLASH NEWS - TAMIL


தனிமைப்படுத்தப்பட்ட மாஞ்சோலை கிராமத்திற்கு உலர் உணவுப் பொருட்கள் கையளித்தல்

கொரோனா தொற்றின் காரணமாக கடந்த சில நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மாஞ்சோலை கிராமத்திற்கு முதற்கட்டமாக 600 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் இன்று (22. 01. 2021) பிரதேச செயலாளரின் தலைமையில் இயங்கும் கொரோனாக் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதில் 100 குடும்பங்களுக்கு உதவிய Zahara Foundation பணிப்பாளருக்கும் ஏனையோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந் நிகழ்வின் போது பிரதேச செயலாளர் முகம்மது கனி, கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி Dr. றிஸ்வி, கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் ஹிதாயத்துல்லாஹ், கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ நிஹார், உதவித் திட்டமிடல் அதிகாரி றியாத், நகர சபை கௌரவ உறுப்பினர்களான ஆசாத், நிவாஸ், கலிபத்துல்லாஹ், கி. பி. சபை பிரதித் தவிசாளர் கௌரவ பாஸித் மற்றும் ஏனையோர் கலந்து கொண்டனர்.






No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.