உடன் அமுலாகும் வகையில் கொழும்பில் மற்றுமொரு பகுதி முடக்கம்! - FLASH NEWS - TAMIL


உடன் அமுலாகும் வகையில் கொழும்பில் மற்றுமொரு பகுதி முடக்கம்!

 


கொழும்பு 09 இல் உள்ள வேலுவனராமய வீதி நேற்று நள்ளிரவு (26) முதல் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.

அந்த வகையில், மொத்தம் 12 பொலிஸ் பகுதிகளும், 68 கிராம சேவகர் பிரிவுகள் தற்போது நாடு முழுவதும் முடக்கப்பட்டிருப்பதாக கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,380 ஆக உயர்ந்துள்ளது. இன்றும் 500க்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அந்த வகையில், 8,143 பேர் நாடு முழுவதும் உள்ள சிகிச்சை நிலையங்களில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் 712 பேர் நோய் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியிருந்தனர். இதன்படி தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32,051 ஆக உயர்ந்துள்ளது. 187 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.