கஞ்சாவுடன் ஒருவர் கைது - ஒருவர் தப்பியோட்டம் - FLASH NEWS - TAMIL


கஞ்சாவுடன் ஒருவர் கைது - ஒருவர் தப்பியோட்டம்

 


-திருகோணமலை நிருபர் பாருக்-

ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வான் ஒன்றில் கஞ்சா கொண்டு சென்ற போது சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விசேட பொலிஸ் அதிரடிப்படைக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹொரவ்பொத்தான - வெலியுமபொத்தான பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் என தெரியவருகின்றது.

தப்பியோடிய குறித்த நபர் தலைமறைவாக இருப்பதாகவும் அவரை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை கெப்பித்திகொள்ளாவ நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபரிடம் இருந்து ஒரு கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.