ஜனாசா நல்லடக்கம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை – கெஹலிய ரம்புக்வெல்ல - FLASH NEWS - TAMIL

ஜனாசா நல்லடக்கம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை – கெஹலிய ரம்புக்வெல்ல


கொவிட்-19 நோய்த் தொற்றினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஜனாசா நல்லடக்கம் தொடர்பில் நேற்றைய தினம் முதல் சமூக ஊடகங்களிலும் ஏனைய ஊடங்களிலும் பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொவிட்டினால் உயிரிழந்த இஸ்லாமியர்களின் ஜனாசா நல்லடக்கம் தொடர்பில் அமைச்சரவையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது குறித்து சுகாதாரத் தரப்பினர் மற்றும் உரிய தரப்பினர் அனுமதி வழங்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து ஜனாசா நல்லடக்கங்களை ஓர் உலர் பிரதேசத்தில் மேற்கொள்வது குறித்த சாத்தியப்பாடுகள் குறித்து நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது எனவும், இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாசா நல்லடக்கம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு சுகாதாரத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

(tamilwin)


BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்