செட்டிகுளம் பிரதேச சபை வரவுசெலவுத் திட்ட அமர்வில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு - FLASH NEWS - TAMIL


செட்டிகுளம் பிரதேச சபை வரவுசெலவுத் திட்ட அமர்வில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு


வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபை வரவு செலவுத் திட்ட அமர்வில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையானது சிறிலங்கா சுதந்திரக் கட்சி வசமுள்ளது. குறித்த பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றல் தொடர்பான அமர்வு இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமானது.

குறித்த அமர்வில் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் வாக்கெடுப்பும் நடைபெற்றது. இந்த அமர்வுக்கு செய்தி சேகரிப்பதற்கு சென்ற பிராந்திய ஊடகவியலாளருக்கு சபை தவிசாளர் ஆசிர்வாதம் அந்தோனி அவர்களால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சபைக்கு வருவதாயின் தம்மிடம் முன் அனுமதி பெற வேண்டும். அதனால் குறித்த அமர்வுக்கு ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்து அவர் ஊடகவியலாளரை வெளியேற்றியிருந்தார்.

இதேவேளை, 17 அங்கத்தவர்களைக் கொண்ட குறித்த பிரதேச சபையில் பல உறுப்பினர்கள் சபை தவிசாளரின் செயற்பாடு தொடர்பில் அதிருப்தியில் உள்ள நிலையில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.