மகாஜனக் கல்லூரி மாணவி ஜனுஸ்கா வடக்கில் முதலிடம்
2020ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகள் பெற்று வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழ்மொழி மூலமான பரீட்சார்த்திகளில் புத்தளம் ஸாஹிரா கல்லூரி மாணவி முகமட் அல்சாத் அதீபாத் ஷைனா 199 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ள நிலையில், மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா அகில இலங்கை ரீதியில் இரண்டாவது நிலையைப் பெற்றுள்ளார்.
இதேவேளை, வடக்கில் யாழ்.மாவட்டத்தில் வழமைபோல் இம்முறையும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளில் புனித பொஸ்கோ ஆரம்பப் பாடசாலை மற்றும் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை ஆகியவற்றில் அதிக மாணவர்கள் வெட்டுப்புள்ளியைத் தாண்டி சித்தி பெற்றுள்ளனர்.
யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையில் 232 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர். 149 பேர் சித்தியடைந்துள்ளனர். புனித பொஸ்கோ ஆரம்பப் பாடசாலையில் கூடிய எண்ணிக்கையான மாணவர்கள் தோற்றினர். 159 பேர் சித்தியடைந்துள்ளனர்.
மேற்படி இரு பாடசாலைகளிலும் ஒவ்வொரு மாணவர்கள் 195 புள்ளிகள் பெற்று முன்னிலை அடைந்துள்ளனர்.



Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK