திங்கட்கிழமை தொடக்கம் வழமைக்கு திரும்பும் பேருந்து சேவைகள்- இ.போ.சபை அறிவிப்பு
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேருந்துகள் வழமைபோல இயங்கும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி பேருந்து சேவையை நடத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், வார இறுதி நாட்களில் தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என்று தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வாரம் இயக்கப்படும் தொடருந்து சேவைகளே அடுத்த வாரமும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



تعليقات
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK