சிகரெட் கொடுப்பதற்கு தாமதமாகிய கடைக்காரரை தாக்கிய இரு இளைஞர்கள் போலீசாரால் கைது. - FLASH NEWS - TAMIL


சிகரெட் கொடுப்பதற்கு தாமதமாகிய கடைக்காரரை தாக்கிய இரு இளைஞர்கள் போலீசாரால் கைது.


(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சில்லறைக் கடை உரிமையாளர் ஒருவரை மது போதையில் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை-10ம் கட்டை மற்றும் மட்கோ, மஹாமாயபுர பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றிரவு (31) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது நண்பரின் வீட்டிற்கு வருகை தந்து மது அருந்திவிட்டு பின்னர் கடைக்கு சென்ற வேளை கடை உரிமையாளர் சிகரெட் கொடுப்பதற்கு தாமதமாகியதால் கோபம் கொண்ட இளைஞர்கள் கடை உரிமையாளரை தாக்கியதாகவும் அதனையடுத்து சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்ததாகவும் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் சோதனையிட்டபோது மதுபோதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞர்களின் தாக்குதலால் காயமடைந்த கடை உரிமையாளர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்றையதினம் திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிசார் தெரிவித்தனர்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.