கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 9 பேர் பலி - FLASH NEWS - TAMIL


கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 9 பேர் பலி


இலங்கையில் இன்றைய தினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 2 ஐ சேர்ந்த 57 வயதான ஒருவரும், வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 65 வயதான ஒருவரும், 75 வயதான பெண் ஒருவரும், தெமட்டகொட பகுதியை சேர்ந்த 85 வயதான ஒருவரும், கொழும்பு 10 ஐ சேர்ந்த 48 வயதான பெண் ஒருவரும், 72 வயதான ஆண் ஒருவரும், கொழும்பு 13 ஐ சேர்ந்த 69 வயதான ஒருவரும், வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 76 வயதான ஒருவரும், கொழும்பு பகுதியை சேர்ந்த 76 வயதான பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கைக்குள் இன்று மாத்திரம் மொத்தமாக 487 கொரோனா தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அனைவரும் தொற்றாளிகளின் தொடர்புகளில் தொற்றுக்களுக்கு உள்ளானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டவர்களின் இதுவரையான மொத்த எண்ணிக்கை 19,771 ஆக உயர்ந்துள்ளது.

6101 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 13590 பேர் தொற்றில்இருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.