232 கிலோகிராம் மஞ்சளுடன் இருவர் கைது
பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகை மஞ்சளுடன் சந்தேக நபர்கள் இருவரை புத்தளம் வலய குற்ற மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்தே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 232 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டதாக இராணு ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட மஞ்சள் தொகையுடன் சந்தேக நபர்கள் ஜூப் ரக வாகனமொன்றில் பயணித்துக்கொண்டிருந்த போதே, இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும் இராணுவ ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK