நாடு முழுவதும் முடக்கப்படுமா..? அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன..? - பந்துல குணவர்த்தன விளக்கம்
ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள சதொச மற்றும் சிறப்பு அங்காடிகளின் ஊடாக பொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
90 ஆயிரம் மெட்றிக் தொன் கிலோ கிராமுக்கும் அதிகளவான சீனி நாட்டிலுள்ள களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தடைகள் எதுவும் இல்லை.
எனவே, ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் சதொச மற்றும் சிறப்பு அங்காடிகளின் ஊடாக பொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எனவே, பொதுமக்கள் அவசியமற்ற வகையில் பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கான தேவை இல்லை.
நாடு முழுவதையும் முடக்குவதற்கான தீர்மானத்தை அரசாங்கம் இதுவரையில் மேற்கொள்ளவில்லை.
கொரோனா தொற்று உறுதியானவர்கள் அடையாளம் காணப்படுகின்ற பகுதிகளில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை அமுல்ப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.



Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK