இலங்கையை முழுமையாக மூடுவதா இல்லையா? இராணுவ தளபதி வெளியிட்டுள்ள தகவல் - FLASH NEWS - TAMIL


இலங்கையை முழுமையாக மூடுவதா இல்லையா? இராணுவ தளபதி வெளியிட்டுள்ள தகவல்


மினுவாங்கொட பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு எவ்வாறு கொரோனா தொற்றியதென ஆராயப்பட்டு வருவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி நாட்டை லொக்டவுன் செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மினுவாங்கொட தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கடந்த 21ஆம் திகதி முதல் ஒரு வகையான காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார். எனவே நோயின் ஆரம்பம் தொடர்பில் கண்டுபிடிப்பது கடினமாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரென்டிக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.