பொது விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு இராணுவ தளபதியின் முக்கிய அறிவிப்பு - FLASH NEWS - TAMIL


பொது விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு இராணுவ தளபதியின் முக்கிய அறிவிப்பு


பொது விடுதிகளில் தங்கியிருந்து பணிகளுக்கு செல்பவர்கள், விடுதியிலுள்ள ஏனையவர்கள் தொடர்பான தகவல்களை பணியாற்றும் நிறுவனத்தின் பிரதானிகளிடம் தெரியப்படுத்துமாறு இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு அது உதவியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் நூற்றுக்கு 45 வீதமானோர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி கூறியுள்ளார்.

நேற்றைய தினம் மினுவாங்கொட பிரென்டிக்ஸ் கொத்தணியில் புதிதாக 194 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.