ஊரடங்குச் சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - FLASH NEWS - TAMIL


ஊரடங்குச் சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

 


திவுலப்பிட்டிய மற்றும் மினுவங்கொடை பிரதேசங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்கும் தேசிய நடவடிக்கை மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஊரடங்குச் சட்டத்தை மதித்து நடந்துகொள்ளுமாறு குறிப்பாக பிரதேச மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நேரத்தில் எவரும் வீடுகளை விடடு வெளியில் வரக் கூடாது. அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் பிரதேசத்தில் இயங்கும்.

சட்டத்தை மீறினால், கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும்.

பொலிஸ் அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் வீடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் செல்ல முடியும்.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத பிரதேசங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.