ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அறிக்கை. - FLASH NEWS - TAMIL


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அறிக்கை.


அரசியலமைப்பின் 20 வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த

அதன் நான்கு எம்.பி.க்கள் குறித்து நடைபெற்ற கலந்துரையாடல் குறித்து இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் அறிக்கை:

சமகி ஜன பலவேகய நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தினை அடுத்து,

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுஃப் ஹக்கீம், அதன் நாடாளுமன்றக் குழுவை நேற்று (23) மாலை தனது இல்லத்தில் கட்சி செயலாளர் நிஜாம் கரியாப்பர் முன்னிலையில் கலந்துரையாடலுக்கு அழைத்தார்.

'20 A ' மீதான வாக்களிப்பு தொடர்பான விடயங்கள் குறித்து நீண்ட விவாதத்திற்குப் பிறகு,

'20 A'வுக்கு ஆதரவாக வாக்களித்த SLMC நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் நிலைப்பாட்டை விளக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது,

இந்த விஷயத்தில் மேலதிக நடவடிக்கைகளை எடுக்க இது தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டது.

இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர், கட்சி செயலாளர் மற்றும் நான்கு எம்.பி.க்கள், (எச் எம் எம் ஹரீஸ், பைசல் காசிம், எம் தவ்ஃபீக், மற்றும் ஹாபிஸ் நசீர் ) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பிரச்சினை தொடர்பில் உரிய தீர்மானங்கள் எடுக்க கட்சியின் உயர்பீடம் விரைவில் கூட வேண்டுமென்று தலைவர் இறுதியில் தெரிவித்தார்.


M Nizam Kariapper

Secretary

Sri Lanka Muslim Congress

24th October 2020.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.