இன்று ஆரம்பமான உயர்தர பரீட்சை மாணவர்ளுக்காக விசேட ரயில், பஸ் சேவைகள் - FLASH NEWS - TAMIL


இன்று ஆரம்பமான உயர்தர பரீட்சை மாணவர்ளுக்காக விசேட ரயில், பஸ் சேவைகள்


இன்று ஆரம்பமான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக விசேட போக்குவரத்து சேவை நடைமுறைப்படுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையும் ரயில்வே திணைக்களமும் தெரிவித்துள்ளது.

பரீட்சை நேர அட்டவணைக்கு அமைவாக விசேட ரயில் சேவை இடம்பெறுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை மத்திய நிலையங்களுக்கு பயணிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்காக விசேட ரயில் பெட்டிகளுடனான 2 ரயில்கள் சேவையில் ஒன்றிணைக்கப்பட்டிருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை அனுமதி அட்டையை அதிகாரிகளுக்கு காண்பித்த பின்னர் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் இந்த விசேட ரயில்களில் பயணிக்க முடியும் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகளுக்காக விசேட பஸ் சேவைகளும் இடம்பெறுதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.