நீதிமன்றில் ஆஜர் செய்யும்போது ரிஷாத்துக்கு விசேட சலுகையளித்த அதிகாரிகள் யார்? அறிக்கை சமர்ப்பிக்க சிஐடிக்கு நீதிமன்று உத்தரவு - FLASH NEWS - TAMIL


நீதிமன்றில் ஆஜர் செய்யும்போது ரிஷாத்துக்கு விசேட சலுகையளித்த அதிகாரிகள் யார்? அறிக்கை சமர்ப்பிக்க சிஐடிக்கு நீதிமன்று உத்தரவு


( எம்.எப்.எம்.பஸீர்)

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை, ஏனைய சந்தேக நபர்களுக்கு இல்லாத, விசேட சலுகையுடன், அவரை மறைத்து விசேடமாக நீதிமன்றில் ஆஜர் செய்தமை தொடர்பில் பூரண விசாரணை ஒன்யை முன்னெடுத்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு , சி.டி பிரதானிக்கு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டார்.

இது குறித்து நீதிமன்றுக்கு பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் தெரிவிக்கையில், அவரை மன்றில் ஆஜர் செய்யும்போது, சி.ஐ.டி. அதிகாரிகள், வழமைக்கு மாற்றமாக, நீதிவானின் உத்தியோகபூர்வ அறைக்கு முன்னாள் அவரது கார் நிறுத்தப்படும் இடம்வரை சந்தேக நபரை அழைத்துவந்த வாகனத்தை செலுத்தினர். 

அத்துடன் ஊடகங்கள் அவரை படம் பிடிப்பதை தடுக்க, ஒரு குழு அவரை முற்றாக மறைத்து நீதிமன்றுக்கு அழைத்து வந்தனர்.

முறைப்பாட்டாளர் தரப்பு, சி.ஐ.டி. எவர் செய்தாலும் தவறு தவறே. இதில் நான் சந்தேக நபரை குறை கூறவில்லை என்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் தெரிவித்தார்.

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மன்றில் முன்வைத்த விசேட காரணி தொடர்பில் ஆராய்ந்தே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.