இறைச்சிக்காக மாடுகளை அறுப்பது தொடர்பில் அமைச்சரவையின் முக்கிய முடிவு
இலங்கையில் மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதை தடை செய்யும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான யோசனை அடங்கிய அமைச்சரவை பத்திரத்தை பிரதமர் மகிந்த ராஜபக்ச தாக்கல் செய்திருந்ததுடன் அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில், இந்த யோசனை சட்டமூலமாக தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர் சட்டமாக மாறும்.இந்த யோசனை இதற்கு முன்னர் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. எவ்வாறாயினும் இறைச்சிக்காக மாடுகள் அறுக்கப்படுவதை தடை செய்யும் சட்டத்திற்கு விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஏற்கனவே எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
மாடு அறுப்பு தடை செய்யப்பட்டால் காளை மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் இதனால், விலங்கு உற்பத்தியாளர்களுக்கு பொருளாதார பிரச்சினைகள் ஏற்படும் எனவும் அவர்கள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK