மருத்துவர் ஷாபி விவகாரம் பாராளுமன்றத்தில் ஆவேசப்பட்டு அடங்கிய அலி சப்ரி; சபையில் சலசலப்பு! - FLASH NEWS - TAMIL


மருத்துவர் ஷாபி விவகாரம் பாராளுமன்றத்தில் ஆவேசப்பட்டு அடங்கிய அலி சப்ரி; சபையில் சலசலப்பு!




மகப்பேற்று மருத்துவர் ஷாபியின் மீதான தற்போதைய விசாரணைகள் தொடர்பில் எழப்பட்ட கேள்விகளினால் நாடாளுமன்றத்தில் இன்று அமைதியின்மை ஏற்பட்டது.


மருத்துவர் ஷாபியின் வழக்கில் ஆஜராகும் சட்டத்தரணிகளின் பெயர்களை வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரி நீதியமைச்சர் அலி சப்ரியிடம் வினவினார்.

அத்துடன் கடந்த அரசாங்கமே பௌத்த பெரும்பான்மையினர் மத்தியில் மருத்துவர் ஷாபி விவகாரத்தை பூதாகரமாக்கியதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

எவ்வாறாயினும் நாடாளுமன்றத்தில் காணப்படும் வழக்குகளின் சட்டத்தரணிகளின் தகவல்களை வழங்குவது நீதியமைச்சரின் கடமையல்லவெனவும் அது தொடர்பில் அறிந்து கொள்ள வேண்டுமாயின் நீதிமன்றத்துக்கு கட்டணம் செலுத்தி அந்த விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் பதிலளித்தார்.


இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நீதியமைச்சர் அலி சப்ரியின் ஆடை தொடர்பில் வௌியிட்ட கருத்தினால் நாடாளுமன்றத்தில் அமையதின்மை ஏற்பட்டது.





No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.