கட்சி தாவல்கள் ஆரம்பம் - எதிரணியில் இருந்து அரசாங்கத்திற்கு செல்லும் 10 பேர் - FLASH NEWS - TAMIL


கட்சி தாவல்கள் ஆரம்பம் - எதிரணியில் இருந்து அரசாங்கத்திற்கு செல்லும் 10 பேர்

பொதுத் தேர்தலில் சமகால அரசாங்கம் அமோக வெற்றி பெற்ற நிலையில் புதிய அமைச்சரவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் எதிரணியில் இருந்து 10 உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்தில் இணைவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துதிய 4 பேர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மலையக கட்சி ஒன்றில் இருவரும், கிழக்கில் சிறிய கட்சி ஒன்றில் இருவரும் வட மத்திய மாகாணத்தில் ஒருவரும் இவ்வாறு அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தெரிய வருகிறது.
அவர்கள் தற்போது வரையிலும் அரசாங்கத்திற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் அவர்களுக்கு அமைச்சு வழங்குவதற்கு எவ்வித வாக்குறுதிகளும் அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அமோக வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.