வெள்ளவத்தை தீ விபத்திற்கு காரணம் என்ன? - FLASH NEWS - TAMIL


வெள்ளவத்தை தீ விபத்திற்கு காரணம் என்ன?

வெள்ளவத்தை W.A.சில்வா மாவத்தைக்கு அருகாமையில் ஏற்பட்ட தீ விபத்திற்கு காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணைகளுக்கு அமைய மின்சார ஒழுக்கு காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இன்று நண்பகல் ஏற்பட்ட விபத்து காரணமாக 6 கடைகள் முழுமையாக எரிந்துள்ளன. சுமார் பத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டன.
இந்த அனர்த்தம் காரணமாக காலி வீதியில் கொழும்பு நோக்கி பயணித்த வாகனங்கள் வேறு வீதிக்கு மாற்றியமைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
தீயணைக்க சென்ற தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.