வேட்பாளர் முஷாரப்பை ஆதரித்து ஹிதாயபுரத்தில் இடம்பெற்ற கூட்டம்! - FLASH NEWS - TAMIL


வேட்பாளர் முஷாரப்பை ஆதரித்து ஹிதாயபுரத்தில் இடம்பெற்ற கூட்டம்!

திகாமடுல்ல மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சட்டத்தரணி முஷாரப்பை ஆதரித்து, ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம், நேற்று (26) பொத்துவில், ஹிதாயபுரம் பகுதியில் இடம்பெற்றது.
கட்சியின் வட்டார அமைப்பாளர் சகோதரர் மனாப் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், பிரதேச சபை உறுப்பினர் என்.எச்.முனாஸ், அப்துல் ஹக் மௌலவி உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
பெருந்திரளான மக்கள் வெள்ளம் புடைசூழ உரையாற்றிய சட்டத்தரணி முஷாரப்பை, பிரதேசவாழ் மக்கள் தோள்களில் சுமந்து, பவனியாக அழைத்து சென்று, பெரும் ஆதரவையும் வரவேற்பையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.