கணவனின் தாக்குதலில் காதலன் பலி - FLASH NEWS - TAMIL


கணவனின் தாக்குதலில் காதலன் பலி

மாதம்பே பழைய நகரப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த ஆண் பெண் இருவர், குறித்த பெண்ணுடைய கணவனின் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் செவ்வாய்க்கிழமை (28) அன்று ஒருவர் உயிரிழந்ததாக மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர்.




உயிரிழந்தவர் மாதம்பே பழைய நகர் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய துஷார தில்ருக்ஷ என அடையாளம் காணப்பட்டுள்ளார். தாக்குதலில் காயமடைந்த பெண் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உயிரிழந்தவர் சந்தேக நபரின் மனைவியுடன் சிறிது காலமாக தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், சம்பவ தினத்தன்று இருவரும் மாதம்பே பழைய நகரப் பகுதியில் உள்ள ஒரு வீடொன்றில் தங்கியிருந்த போது அந்த இடத்திற்கு வந்த சந்தேக நபர் தனது மனைவியை மற்றும் அவரது கள்ளக்காதலனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.