இரு தினங்களுக்கு திறக்கப்படும் அஞ்சல் நிலையங்கள்


மே மாதத்திற்கான ஓய்வூதியம், கமத்தொழிலாளர்கள், மீனவர்களின் ஓய்வூதியம், முதியோர் மற்றும் பொது நிதி உதவிகளை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு அதனை வழங்குவதற்காக அஞ்சல் நிலையங்களை இரண்டு தினங்களுக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நாளை (28) நாளை மறுதினம் (29) ஆகிய இரண்டு தினங்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அஞ்சல் நிலையங்கள் திறந்திருக்கும் என அஞ்சல் மா அதிபர் அறிவித்துள்ளார்.

கோவிட் 19 பரவலை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Comments