இரு தினங்களுக்கு திறக்கப்படும் அஞ்சல் நிலையங்கள்
மே மாதத்திற்கான ஓய்வூதியம், கமத்தொழிலாளர்கள், மீனவர்களின் ஓய்வூதியம், முதியோர் மற்றும் பொது நிதி உதவிகளை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு அதனை வழங்குவதற்காக அஞ்சல் நிலையங்களை இரண்டு தினங்களுக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், நாளை (28) நாளை மறுதினம் (29) ஆகிய இரண்டு தினங்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அஞ்சல் நிலையங்கள் திறந்திருக்கும் என அஞ்சல் மா அதிபர் அறிவித்துள்ளார்.
கோவிட் 19 பரவலை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK